​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தவறான உறவில் இருந்ததை பார்த்து விட்ட மாமியார்.. தீர்த்துக்கட்டிய மருமகள்.. நகைக்காக நடந்த கொலை என நாடகமாடியது அம்பலம்..!

Published : Jul 20, 2024 4:53 PM

தவறான உறவில் இருந்ததை பார்த்து விட்ட மாமியார்.. தீர்த்துக்கட்டிய மருமகள்.. நகைக்காக நடந்த கொலை என நாடகமாடியது அம்பலம்..!

Jul 20, 2024 4:53 PM

தனது தவறான நடத்தையை கணவரிடம் கூறி விடுவார் என்ற அச்சத்தில் மாமியாரைக் கொலை செய்த மருமகளையும் அவரது காதலரையும் போலீசார் கைது செய்தனர்.

மதுரையை அடுத்த திருமங்கலம் அருகே வாகைகுளத்தில் கடந்த வாரம் மூதாட்டி காசம்மாள் என்பவர் கொலை செய்யப்பட்டு 65 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

சம்பவம் குறித்து அவரது மருமகள் சுதாவிடம் போலீசார் நடத்தியபோது, தனது கணவர் வெளிமாநிலத்தில் பணியாற்றி வரும் நிலையில், கேபிள் ஆபரேட்டர் பாக்யராஜுடன் பழகியதாகவும் அதை நேரில் தனது மாமியார் பார்த்து விட்டதால் பாக்யராஜ் மூலம் கொலை செய்து விட்டு, நகைக்கான நடந்த கொலை என நாடகமாடியாதாகவும் கூறியதாக தெரிகிறது.