​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் 20வது ஆண்டு விழா.. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பங்கேற்பு..!

Published : Jul 20, 2024 3:21 PM

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் 20வது ஆண்டு விழா.. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பங்கேற்பு..!

Jul 20, 2024 3:21 PM

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் 20ஆம் ஆண்டு நிறைவு விழா மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், ஆண்டு விழாவின் நினைவு தூணை காணொளி வாயிலாக திறந்துவைத்தார்.

மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளை என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டு, மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு என்ற பெயர் பலகையும் இவ்விழாவில் திறந்துவைக்கப்பட்டது. விழாவில் பேசிய சந்திரசூட், ஔவையாரின், அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல் என்ற பாடலைக் குறிப்பிட்டு பேசினார்.