​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தஞ்சாவூர் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக 2 பேரிடம் ரூ.14 லட்சம் மோசடி

Published : Jul 20, 2024 12:03 PM

தஞ்சாவூர் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக 2 பேரிடம் ரூ.14 லட்சம் மோசடி

Jul 20, 2024 12:03 PM

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி இரண்டு பேரிடம் தலா 7 லட்சம் பணம் வாங்கி ஏமாற்றியதாக சத்துணவு ஊழியர் அமைப்பாளர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகி வரதராஜன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

விளத்தூர் கிராமத்தை சேர்ந்த வரதராஜன், வினோத் மற்றும் முத்து ஆகியோரிடம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. வேலையும் வாங்கித்தராமல் பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் தலைமறைவான வரதராஜன் சாக்கோட்டை இருப்பதாக அறிந்த இருவரும் அவரை பிடித்து நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.