​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பத்தூரில் அலுமினியம் பெயின்டிங் பிரஷில் பெயின்ட் அடித்த கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி

Published : Jul 20, 2024 7:26 AM

திருப்பத்தூரில் அலுமினியம் பெயின்டிங் பிரஷில் பெயின்ட் அடித்த கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி

Jul 20, 2024 7:26 AM

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில், பெயின்டர் ஒருவர் மொட்டை மாடியில் பெயின்ட் அடித்துக்கொண்டிருந்தபோது, கையில் இருந்த அலுமினியம் பிரஷ், மின் கம்பியில்  உரசி, உடலில் மின்சாரம் பாய்ந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தீபன் என்ற அந்த பெயிண்டர் மாடியில் தொங்கியபடியே உயிரை விட்டதாகவும், அவரை காப்பாற்ற முயன்றபோது மற்றொரு பெயின்டரான சுரேஷ் என்பவரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்ததாகவும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.