​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருநெல்வேலி காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கொலை வழக்கு... மனைவி, மகன்களிடம் பல மணி நேரம் நீடித்த சிபிசிஐடி விசாரணை

Published : Jul 19, 2024 12:16 PM

திருநெல்வேலி காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கொலை வழக்கு... மனைவி, மகன்களிடம் பல மணி நேரம் நீடித்த சிபிசிஐடி விசாரணை

Jul 19, 2024 12:16 PM

திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி கே.பி.கே.ஜெயக்குமார் கொல்லப்பட்ட வழக்கில் அவரது மனைவி மற்றும் மகன்களிடம், சி.பி.சி.ஐ.டி போலீசார் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.

ஜெயக்குமார் மரண வழக்கில் புது, புது கோணங்களில் விசாரணை நடத்தியும் 70 நாட்கள் ஆகியும் குற்றவாளிகள் குறித்து எந்த துப்பும் கிடைக்காததால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதன்படி நேற்று மதியம் ஜெயக்குமார் இல்லத்திற்கு சென்ற சி.பி.சி.ஐ.டி போலீசார் இரவு 9 மணி வரை குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.