​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதுச்சேரியில் பலத்த காற்று வீசியபோது படகில் இருந்து நிலைதடுமாறி கடலில் விழுந்த மீனவர் உயிரிழப்பு

Published : Jul 19, 2024 6:35 AM

புதுச்சேரியில் பலத்த காற்று வீசியபோது படகில் இருந்து நிலைதடுமாறி கடலில் விழுந்த மீனவர் உயிரிழப்பு

Jul 19, 2024 6:35 AM

புதுச்சேரி தேங்காய்திட்டு துறைமுகத்தில், படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் ஒருவர் அவரது மகனின் கண் எதிரே கடலில் மூழ்கி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.

63 வயதான சுப்புரமணி தனது படகில் டீசல் நிரப்பிக்கொண்டிருந்தபோது பலத்த காற்று வீசி படகு ஆடியதால், நிலைதடுமாறு கடலில் விழுந்ததாகவும், அப்போது படகில் இருந்த மீன்பிடி வலைகள் சரிந்து அவர் மீது விழுந்ததால் மேலே வர முடியாமல் மூழ்கியபோது படகில் இருந்த அவரது மகனும், சக மீனவர்களும் அவரை மீட்டதாக கூறப்படுகிறது.

சுப்ரமணியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மூச்சு திணறி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.