​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வட மாநிலங்களுக்கு நூதன முறையில் குட்கா கடத்தல் குட்கா கடத்தல் கும்பலைச் சேர்ந்த 3 பேர் கைது

Published : Jul 18, 2024 8:25 PM

வட மாநிலங்களுக்கு நூதன முறையில் குட்கா கடத்தல் குட்கா கடத்தல் கும்பலைச் சேர்ந்த 3 பேர் கைது

Jul 18, 2024 8:25 PM

 தமிழக நாட்டு நாய்களை வட மாநிலங்களுக்கு எடுத்து சென்று விற்பதுபோல் பாவனை செய்து நாய் வண்டியில் மறைத்து குட்கா கடத்தி வந்த கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் 3 லோடு வேன்களில் பதுக்கப்பட்டிருந்த 2 டன் குட்காவை கைப்பற்றிய போலீசார், அவற்றின் ஓட்டுநர்களான 3 வட மாநிலத்தவரை கைது செய்து விசாரித்தபோது குட்கா கடத்தல் பற்றி தெரியவந்தது.

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்படும் குட்காவை போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருக்க, நாய் வண்டியில் சிப்பிப்பாறை நாய்களை கட்டி கொண்டு சென்றதாக அவர்கள் குறிப்பிட்டனர்.