​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
5 பள்ளிகளுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரம்... சந்தேக நபராக அழைத்து வரப்பட்ட ஐ.டி ஊழியர் விடுவிப்பு

Published : Jul 18, 2024 5:04 PM

5 பள்ளிகளுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரம்... சந்தேக நபராக அழைத்து வரப்பட்ட ஐ.டி ஊழியர் விடுவிப்பு

Jul 18, 2024 5:04 PM

சென்னையில் 5 பள்ளிகளுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில் சந்தேக நபராக விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட ஐ.டி ஊழியர் சதீஷை போலீசார் விடுவித்தனர்.

ஓவியா துரைசாமி என்ற பெயரில் இ மெயில் மூலமாக விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலில் குறிப்பிட்டிருந்த செல்போன்எண்ணை விசாரித்ததில் அவர், செம்மேஞ்சேரியை சேர்ந்த சதீஷ் என்பது தெரியவந்தது.

இதையடுத்து பட்டினப்பாக்கம் காவல்நிலையத்தில் வைத்து விசாரித்த போலீசார் சதீஷை சிக்க வைப்பதற்கு அவரது செல்போன் எண்ணை மெயிலில் குறிப்பிட்டுள்ளதாகவும், அதன் பின்னணியில் யார்? எங்கிருந்து இ-மெயில் வந்துள்ளது என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.