​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பரபரப்பான சாலையில் பலர் முன்னிலையில் நடந்த கொலை.... ஒ.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிப் பிரமுகரை வெட்டிக் கொன்ற டி.டி.பி பிரமுகர்

Published : Jul 18, 2024 4:48 PM

பரபரப்பான சாலையில் பலர் முன்னிலையில் நடந்த கொலை.... ஒ.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிப் பிரமுகரை வெட்டிக் கொன்ற டி.டி.பி பிரமுகர்

Jul 18, 2024 4:48 PM

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் வினுகொண்டா என்ற நகரில் ஒ.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷேக் ரஷீத் என்ற இளைஞரை, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ஷேக் ஜிலானி என்பவர் நட்டநடு சாலையில் வைத்து கொடூரமாக வெட்டிக் கொனறார்.

கொலை சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஜகன்மோகன் ரெட்டி, "அதிகாரம் நிரந்தரமல்ல என்பதை சந்திரபாபு நாயுடு புரிந்துகொள்ள வேண்டும்" என்றும் "வன்முறை அரசியலை அவர் கைவிட வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சித் தரப்பில், "கொலை செய்தவரும் ஒ.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்தான் என்றும் இருவருமே குற்றப் பின்னணி கொண்ட ரௌடிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.