​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
2029 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் அளவிற்கு வலிமையாக உள்ளோம்: செல்வபெருந்தகை

Published : Jul 18, 2024 10:26 AM

2029 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் அளவிற்கு வலிமையாக உள்ளோம்: செல்வபெருந்தகை

Jul 18, 2024 10:26 AM

வரும் 2029 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனியாக நின்றாலும் வெற்றி பெறும் அளவிற்கு வலிமையாக உள்ளது என்பதை அனைவரும் உணர வேண்டும் என காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை கூறினார். திருவள்ளூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

செயல்வீரர்கள் கூட்டத்திற்கு பிறகு பேட்டியளித்த செல்வபெருந்தகையிடம், 2029 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுமா என கேள்வி எழுப்பப்பட்டதற்கு, தொண்டர்களை ஊக்குவிப்பதற்காக மட்டுமே தான் அவ்வாறு பேசியதாக தெரிவித்தார்.