​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கள்ளக்குறிச்சியில் 100 அடி ஆழமுள்ள கிணற்றில் தவித்த 2 சிறுவர்கள் மீட்பு

Published : Jul 18, 2024 9:48 AM

கள்ளக்குறிச்சியில் 100 அடி ஆழமுள்ள கிணற்றில் தவித்த 2 சிறுவர்கள் மீட்பு

Jul 18, 2024 9:48 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம் முனிவாழை கிராமத்தில் புறா பிடிப்பதற்காக 100 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி விட்டு மேலே ஏற முடியாமல் தவித்த 2 சிறுவர்களை தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி மீட்டனர்.

கிணற்றில் கட்டப்பட்டிருந்த கயிறு வழியாக உள்ளே இறங்கியவர்களால் மேலே ஏற முடியாமல், கத்திக் கூச்சலிட்டனர். அப்பகுதியில் இருந்த விவசாயிகள் அளித்த தகவலைத் தொடர்ந்து ரிஷிவந்தியம் தீயணைப்புத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.