​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நியோ மேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கை இழுத்தடிக்கும் வகையில் மனுத்தாக்காலுக்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்

Published : Jul 18, 2024 8:30 AM

நியோ மேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கை இழுத்தடிக்கும் வகையில் மனுத்தாக்காலுக்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்

Jul 18, 2024 8:30 AM

நியோ மேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கை இழுத்தடிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் மனுத்தாக்கல் செய்தவருக்கு அபராதம் விதிக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

பல கோடி ரூபாய் மோசடி புகாருக்கு உள்ளான நியோ மேக்ஸ் நிதி நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர்களின் சொத்துக்களை முடக்க வேண்டுமென திருச்சியைச் சேர்ந்த முத்துக்குமரன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனு நீதிபதி புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனு தொடர்பாக கூடுதல் தகவல்களை அவர் தாக்கல் செய்யாததால் மனுதாரர் மீது நீதிமன்றத்திற்கு சந்தேகம் எழுவதாகவும், முறையான தகவல் தாக்கல் செய்யப்படாவிட்டால் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.