​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தென்மேற்கு பருவமழை - ஆறுகள், அருவிகளில் வெள்ளப்பெருக்கு

Published : Jul 17, 2024 2:46 PM

தென்மேற்கு பருவமழை - ஆறுகள், அருவிகளில் வெள்ளப்பெருக்கு

Jul 17, 2024 2:46 PM


நீலகிரி மலைப்பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் தெங்குமரஹாடா வனப்பகுதியில் உள்ள மாயாற்றில் செந்நிறத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தொடர் மழையால் தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் உள்ள அணைப்பிள்ளையார் தடுப்பணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அப்பகுதிக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.