​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோடநாடு வழக்கு: கேரளாவைச் சேர்ந்த 2 பேரிடம் சி.பி.சி.ஐ.டி விசாரணை

Published : Jul 17, 2024 9:46 AM

கோடநாடு வழக்கு: கேரளாவைச் சேர்ந்த 2 பேரிடம் சி.பி.சி.ஐ.டி விசாரணை

Jul 17, 2024 9:46 AM

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவோடு சம்பந்தப்பட்ட கோடநாடு வழக்கில் கேரளாவைச் சேர்ந்த வாளையார் மனோஜ், பிஜின் குட்டி ஆகியோரிடம் கோவை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தினர்.

பி.ஆர்.எஸ்., மைதானத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி., முருகவேல் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். கோடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக இதுவரையில் 220 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.