​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பள்ளியில் ஏற்பட்ட சண்டை பெற்றோருக்குத் தெரிந்ததால் பயத்தில் பள்ளியிலிருந்து மாயமான மாணவர்கள்..

Published : Jul 16, 2024 5:19 PM

பள்ளியில் ஏற்பட்ட சண்டை பெற்றோருக்குத் தெரிந்ததால் பயத்தில் பள்ளியிலிருந்து மாயமான மாணவர்கள்..

Jul 16, 2024 5:19 PM

பெற்றோர்கள் அடிப்பார்கள் என பயந்து போய் காரைக்காலில் உள்ள பள்ளியில் இருந்து எங்காவது ஓடிப் போகலாம் என புறப்பட்ட 8-ஆம் வகுப்பு மாணவர்கள் 2 பேரை போலீசார் 3 மணி நேரத்தில் நாகூர் பேருந்து நிலையத்தில் மீட்டனர். அவர்களைப் பார்த்ததும் பெற்றோர் கட்டிப்பிடித்து கதறி அழுதனர்.

ஓடிப் போன மாணவர்கள் இருவரும் காரைக்கால் கோவில்பத்து அரசுப் பள்ளியில் படித்து வந்ததாக கூறப்படுகிறது. சிறு தகராறு காரணமாக நண்பன் பேச மறுத்ததால், மற்றொரு மாணவன் கையை பிளேடால் கிழித்துக் கொண்டதாகவும், இது பற்றி ஆசிரியர்கள் பெற்றோரிடம் கூறியதால் பதறிப் போன இருவரும் பேருந்தில் ஏறி நாகூர் சென்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.