​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அதிகாலையில் நடைபயிற்சி சென்ற நா.த.க நிர்வாகி வெட்டிக் கொலை

Published : Jul 16, 2024 3:57 PM

அதிகாலையில் நடைபயிற்சி சென்ற நா.த.க நிர்வாகி வெட்டிக் கொலை

Jul 16, 2024 3:57 PM

மதுரை தல்லாகுளத்தில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்பிரமணியன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அதிகாலையில் பாலசுப்பிரமணியன் நடைபயிற்சி சென்றபோது பின் தொடர்ந்து சென்ற 4 பேர் கொண்ட கும்பல் அவரை விரட்டத் தொடங்கிய நிலையில், காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் எனக் கூச்சலிட்டவாறே பாலசுப்பிரமணியன் ஓடியதாகக் கூறப்படுகிறது.

இருந்தும் அவரை விரட்டிச் சென்று வெட்டிவிட்டு அந்தக் கும்பல் தலைமறைவானது.

கொலையான பாலசுப்பிரமணியன் சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்றும் குடும்பப் பிரச்சனை காரணமாகவே அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக, போலீசார் தெரிவித்தனர்