​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருவள்ளூரில் சாலையில் சுற்றித்திரிந்த 50 மாடுகளைப் பிடித்து கோசாலையில் ஒப்படைத்த நகராட்சி ஊழியர்கள்

Published : Jul 16, 2024 12:04 PM

திருவள்ளூரில் சாலையில் சுற்றித்திரிந்த 50 மாடுகளைப் பிடித்து கோசாலையில் ஒப்படைத்த நகராட்சி ஊழியர்கள்

Jul 16, 2024 12:04 PM

திருவள்ளூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகள் மற்றும் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சுற்றித் திரிந்த சுமார் 50 மாடுகளை போலீசார் உதவியுடன் நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவின் பேரில் பிடிக்கப்படும் மாடுகள் கோசாலையில் ஒப்படைக்கும் என்றும், மாடுகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.