​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜெயலலிதா மரணம் - அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Published : Jul 15, 2024 3:59 PM

ஜெயலலிதா மரணம் - அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Jul 15, 2024 3:59 PM

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் பரிந்துரைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சி.பி.ஐ விசாரணை கோரியும், மரணத்தில் எழுந்துள்ள சந்தேகங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்த போதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.