​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி துரைசாமியின் சகோதரி மகனை கைது செய்த போலீசார்.. காரணம் என்ன..?

Published : Jul 12, 2024 7:08 PM

என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி துரைசாமியின் சகோதரி மகனை கைது செய்த போலீசார்.. காரணம் என்ன..?

Jul 12, 2024 7:08 PM

புதுக்கோட்டையில் என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி துரைசாமியின் சகோதரி மகன் பிரதீப்குமாரை துப்பாக்கியை காட்டி வழிப்பறி செய்த வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

பழங்கனாகுடி பிரிவு சாலையில் டூவீலரில் சென்றபோது துப்பாக்கி முனையில் 2 சவரன் செயின், வாட்ச் ஆகியவற்றை வழிப்பறி செய்ததாக திருவெறும்பூரை சேர்ந்த ஐயப்பன் என்பவர் கொடுத்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தி பிரதீப் குமாரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அவரிடமிருந்து தங்க செயின், கைத் துப்பாக்கி மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.