​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொடுத்த கடனுக்கு வட்டி கேட்ட நண்பன்.. கழுத்தை நெறித்துக் கொன்று பாலாற்று மணலில் புதைத்த நபர்..!

Published : Jul 12, 2024 6:24 PM

கொடுத்த கடனுக்கு வட்டி கேட்ட நண்பன்.. கழுத்தை நெறித்துக் கொன்று பாலாற்று மணலில் புதைத்த நபர்..!

Jul 12, 2024 6:24 PM

கொடுத்த கடனுக்கு வட்டி கேட்ட நண்பனின் கழுத்தை நெறித்துக் கொன்று பாலாற்று மணலில் புதைத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் அருகே கோயம்பாக்கத்தில் பாலாற்று மணலில் இருந்து மனிதக் கால் ஒன்று வெளியே நீட்டிக் கொண்டு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சென்ற போலீசார், அழுகிய நிலையில் சடலம் ஒன்றை மீட்டனர்.

இறந்து கிடந்தவர் அய்யம்பேட்டையைச் சேர்ந்த தனுஷ் என்பது தெரியவந்தது. சடலம் கிடைத்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி.யை ஆய்வு செய்த போது, தனுஷின் நண்பரான விஷ்வாவின் கார் அவ்வழியாக சென்றதை பார்த்து, விஷ்வாவைப் பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, தமது வீட்டை பழுது நீக்கவும், புது பைக் வாங்கவும் தனுஷிடம் 10 லட்ச ரூபாய் வாங்கியதாகவும், அந்த தொகைக்கு 5 மாதங்களாக வட்டி கேட்டு தனுஷ் தொல்லை தந்ததால் அவரை தீர்த்துக் கட்டியதாகவும் வாக்குமூலம் அளித்த விஷ்வா மற்றும் உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சுந்தரை போலீசார் கைது செய்தனர்.

அதிக வட்டி கிடைக்கும் என்ற ஆசையில் தமது தாய் மற்றும் உறவினர்களிடம் நகைகளை வாங்கி அடகு வைத்து விஷ்வாவிடம் தனுஷ் பணம் கொடுத்தாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.