​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருச்சி சைபர் கிரைம் போலீசார் தொடுத்த வழக்கில் சாட்டை துரைமுருகன் விடுவிப்பு: நீதிபதி

Published : Jul 12, 2024 7:38 AM

திருச்சி சைபர் கிரைம் போலீசார் தொடுத்த வழக்கில் சாட்டை துரைமுருகன் விடுவிப்பு: நீதிபதி

Jul 12, 2024 7:38 AM

திமுக அரசு 11 வழக்குகள் போட்டு தன்னை முடக்க நினைத்ததாகவும், ஆனால் நீதிபதி தன்னை விடுதலை செய்து விட்டதாகவும் நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் யூடியூபருமான சாட்டை துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து தரக் குறைவாக விமர்சித்து பாடியதாக சாட்டை துரைமுருகனை திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிமன்ற காவலுக்கு செல்ல தேவையில்லை எனக்கூறி அவரை நீதிபதி விடுவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சாட்டை துரைமுருகன், தாம் பாடிய பாடல் அதிமுக தேர்தல் பிரச்சாரங்களில் 31 ஆண்டுகளாக பாடப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.