​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பூம்புகார் துறைமுகத்தில் மீனவர்களிடமிருந்து சுருக்குமடி வலையை பறிமுதல் செய்த மீன்வளத்துறை அதிகாரிகள்

Published : Jul 11, 2024 6:30 AM

பூம்புகார் துறைமுகத்தில் மீனவர்களிடமிருந்து சுருக்குமடி வலையை பறிமுதல் செய்த மீன்வளத்துறை அதிகாரிகள்

Jul 11, 2024 6:30 AM

பூம்புகார் துறைமுகத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை மீனவர்களிடமிருந்து மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து மீனவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நேரிட்டது.


சுருக்குமடி வலைகளை பயன்படுத்தவில்லை என மீனவர்களும், அவ்வாறு பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறையினரும் தெரிவித்தனர். அங்கு பரபரப்பு நிலவியதால் 2 காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்டனர்.