​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் மெட்ரோ ரயில் தொழில்நுட்பக் கோளாறால் சுரங்கத்தில் இருட்டிலும் புழுக்கத்திலும் தவித்த 300 பயணிகள்

Published : Jul 11, 2024 6:16 AM

சென்னையில் மெட்ரோ ரயில் தொழில்நுட்பக் கோளாறால் சுரங்கத்தில் இருட்டிலும் புழுக்கத்திலும் தவித்த 300 பயணிகள்

Jul 11, 2024 6:16 AM

சென்னை விம்கோ நகரில் இருந்து விமான நிலையம் நோக்கி நேற்று மாலை புறப்பட்ட மெட்ரோ ரயில், சென்னை உயர்நீதிமன்றம் மெட்ரோ ரயில் நிலையத்தை கடந்த சிறிது நேரத்திலேயே ரயிலுக்கு வெளியே தீப்பொறியுடன் பலத்த சத்தம் கேட்டதால் உடனடியாக ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது.

ரயிலின் உள்ளே மின் விளக்குகள் அணைந்து ஏசி வசதியும் தடைப்பட்டுள்ளது. இருபது நிமிடங்கள் வெளிச்சமின்றியும், ஏசி வசதியும் இன்றி பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.