​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வாய்க்காலில் அடித்துச் செல்லப்பட்ட யானை.. அதிகாரிகள் செய்த நெகிழ்ச்சி செயல்..!

Published : Jul 10, 2024 4:16 PM

வாய்க்காலில் அடித்துச் செல்லப்பட்ட யானை.. அதிகாரிகள் செய்த நெகிழ்ச்சி செயல்..!

Jul 10, 2024 4:16 PM

முல்லைப்பெரியாறு அணை வாய்க்காலில் அடித்துச் செல்லப்பட்ட யானையை தண்ணீர் திறப்பை நிறுத்தி பொதுப்பணித்துறையினர் மீட்டனர்.

தமிழக பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீர் வாய்க்கால் வழியாக 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணித்து தலைமதகு பகுதியிலிருந்து சுரங்க வாய்க்கால் வழியாக செல்கிறது.

1200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் வாய்க்காலை கடக்க முயன்ற யானை ஒன்று தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு ஷட்டர் பகுதியில் சிக்கிக் கொண்டது. தகவலறிந்த பெதுப்பணித்துறையினர் வாய்க்காலுக்குச் செல்லும் நீரை நிறுத்தியதால் யானை நீத்திச் சென்று கரையேறியது.