​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் இன்று முதல் 20 நாட்களுக்கு தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

Published : Jul 10, 2024 11:50 AM

சென்னையில் இன்று முதல் 20 நாட்களுக்கு தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

Jul 10, 2024 11:50 AM

சென்னையில் இன்று முதல் தெரு நாய்கள் கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கியது. கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் என ஒரு குழுவில் 2 பேர் வீதம் மொத்தம் 36 குழுவினர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று முதல் 20 நாட்களுக்கு நடைபெறும் கணக்கெடுப்பு பணியில் தடுப்பூசி போடப்பட்ட நாய்கள், கருத்தடை செய்யப்பட்ட நாய்கள், குட்டிகள், பெரிய நாய்கள், ஆண் அல்லது பெண் நாய்கள் என புகைப்படத்துடன் அனைத்து விவரங்களும் சேகரிக்கப்படுகிறது.