​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இஸ்ரேல் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 29 பேர் கொல்லப்பட்டதாக தகவல்

Published : Jul 09, 2024 10:10 PM

இஸ்ரேல் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 29 பேர் கொல்லப்பட்டதாக தகவல்

Jul 09, 2024 10:10 PM

இஸ்ரேல் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 29 பேர் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

கொல்லப்பட்டவர்களில் ஐந்து பாலஸ்தீன ஊடகவியலாளர்களும் அடங்குவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, காசா மருத்துவமனைகளில் எரி பொருள் நெருக்கடி நிலவி வரும் நிலையில், மருத்துவமனைகளுக்குள் பல துறைகளில் பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.

ஜூன் 27 அன்று வெளியிடப்பட்ட இஸ்ரேலிய ராணுவ வெளியேற்ற உத்தரவைத் தொடர்ந்து கிழக்கு காசா நகரத்திலிருந்து இதுவரை சுமார் 80 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.