​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கல்லூரி வாயில் முன்பு நிறுத்தப்படும் வாகனங்களில் அமர்ந்து மது குடிக்கும் போதை ஆசாமிகளால் மிகுந்த சிரமம் ஏற்படுவதாக மாணவ, மாணவிகள் புகார்

Published : Jul 09, 2024 12:50 PM

கல்லூரி வாயில் முன்பு நிறுத்தப்படும் வாகனங்களில் அமர்ந்து மது குடிக்கும் போதை ஆசாமிகளால் மிகுந்த சிரமம் ஏற்படுவதாக மாணவ, மாணவிகள் புகார்

Jul 09, 2024 12:50 PM

சென்னை, மேடவாக்கத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நுழைவு வாயில் பகுதியில் நிறுத்தி வைக்கப்படும் லாரிகள், கார்கள் மற்றும் ஆட்டோக்களில் அமர்ந்து மது அருந்துபவர்களால் தொல்லை ஏற்படுவதாக மாணவ, மாணவிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மது அருந்திவிட்டு பாட்டில்களை தூக்கி எறிவதாகவும், கல்லூரி சுவற்றில் சிறுநீர் கழிப்பதாகவும், மாணவ, மாணவிகள் வேதனை தெரிவித்தனர்.

கல்லூரி வாயிலின் முன்பு உள்ள பாலத்தின் அடியில் தங்குபவர்கள் அங்கேயே குளிப்பதாகவும், மாணவிகளை பார்த்து விசிலடித்து ரகளையில் ஈடுபடுவதால் அச்சம் ஏற்படுவதாகவும் கூறியதோடு, இதுகுறித்து உடனடியாக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.