​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பூரில் வீடுகளின் மேல் மர்மமான முறையில் கற்கள் வீச்சு ட்ரோன் கேமரா, சிசிடிவி வைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு

Published : Jul 09, 2024 11:31 AM

திருப்பூரில் வீடுகளின் மேல் மர்மமான முறையில் கற்கள் வீச்சு ட்ரோன் கேமரா, சிசிடிவி வைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு

Jul 09, 2024 11:31 AM

திருப்பூர் மாவட்டம் படியூர் அருகே ஒட்டப்பாளையத்தில் கடந்த 12 நாட்களாக மாலை 6 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை தொடர்ச்சியாக வீடுகளின் மேல் மர்மமான முறையில் கற்கள் வீசப்படுவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

யார், எங்கிருந்து கற்களை வீசுகிகிறார்கள் என்று தெரியாமல் அச்சம் ஏற்பட்டுள்ளதால் வீடுகளில் தங்குவதற்கு பயந்து கருப்பராயன் கோயிலில் தஞ்சமடைந்து அங்கேயே சமைத்து சாப்பிட்டு வருவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் கிராம மக்கள் புகார் அளித்ததையடுத்து, போலீசார் ரோந்து சென்றபோதும் கற்கள் விழுந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ட்ரோன் கேமரா, கிரேன் வாகனத்தில் 60 அடி உயரத்தில் ஆட்களை அமர்த்தி சுற்றுவட்டார பகுதிகளை கண்காணித்தல், அதிக ஒளி கொண்ட விளக்குகளை பொருத்தியும், சிசிடிவி கண்காணிப்பு கேமரா அமைத்தும் கண்காணிப்பு பணிகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.