​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதுரை எம்.பி சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் மக்களுக்காக பேசப் போவதில்லை: பா.ம.க பொருளாளர் திலகபாமா

Published : Jul 09, 2024 10:16 AM

மதுரை எம்.பி சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் மக்களுக்காக பேசப் போவதில்லை: பா.ம.க பொருளாளர் திலகபாமா

Jul 09, 2024 10:16 AM

மதுரை எம்.பி சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் மக்களுக்காக பேசப் போவதில்லை என்றும் மோடியை எதிர்த்து பேச வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே அவரிடம் உள்ளது என்றும் பா.ம.க மாநில பொருளாளர் திலகபாமா கூறினார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செங்கோலுக்கு எதிராகப் பேசுவதாக எண்ணிக்கொண்டு, தமிழ் மன்னர்கள் குறித்து அவமரியாதையாகவும் தரக்குறைவாகவும் சு.வெங்கடேசன் பேசியுள்ளதாகக் கூறினார்.

தமிழ்நாட்டில் கள்ளச்சாராய சாவு குறித்தும் ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்தும் திமுக அரசை தட்டிக்கேட்பதை விட்டுவிட்டு, கம்யூனிஸ்ட் கட்சியினர் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்றும் திலகபாமா கேள்வி எழுப்பினார்.