​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆம்ஸ்டிராங்கின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த அண்ணாமலை

Published : Jul 08, 2024 9:13 PM

ஆம்ஸ்டிராங்கின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த அண்ணாமலை

Jul 08, 2024 9:13 PM

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் பட்டியலினத்தவர்கள் பாதிக்கப்பட்ட 17 சம்பவங்கள் தொடர்பாக டெல்லியில் தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தில் பா.ஜ.க. புகார் அளிக்க இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்டிராங் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தபின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ஆம்ஸ்ட்ராங் மரணத்துக்கு நியாயம் கிடைக்க தேசிய அளவில் பிரச்சினையை கொண்டு செல்ல இருப்பதாக கூறியுள்ளார்.