​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒசூர் அருகே பிறந்து 14நாட்களே ஆன பெண் குழந்தையை பாறையில் வீசி கொன்ற கொடூர தந்தை கைது

Published : Jul 05, 2024 8:44 PM

ஒசூர் அருகே பிறந்து 14நாட்களே ஆன பெண் குழந்தையை பாறையில் வீசி கொன்ற கொடூர தந்தை கைது

Jul 05, 2024 8:44 PM

ஓசூரை அருகே பிறந்து 14 நாட்களே ஆன பெண் குழந்தையை பாறை மீது வீசிக் கொன்றதாக தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒன்னுகுறிக்கி கிராமத்தில் மாதையன் - சின்னம்மா தம்பதிக்கு ஏற்கனவே ஒரு மகன், மகள் உள்ள நிலையில், 2 வாரங்களுக்கு முன்பு மீண்டும் பெண் குழந்தை பிறந்ததாக தெரிகிறது.

இன்னொரு பெண் குழந்தை தேவையில்லை, கொன்றுவிடலாம் எனக் கூறி மனைவியிடம் தகராறு செய்து வந்த மாதையன், வியாழன் மாலை குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓடியுள்ளார்.

அவரை சின்னம்மாவும் உறவினர்களும் விரட்டிக் கொண்டு ஓடிய நிலையில், அவர்கள் கண்முன்னே மாதையன் குழந்தையைத் தூக்கி பாறை மீது வீசியதாகவும், இதில் பாறை இடுக்கில் சிக்கி குழந்தை பரிதாபமாக இறந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.