​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாகர்கோவிலில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 3 சவரன் நகை திருடிய பெண்களை மடக்கிப் பிடித்த மாற்றுத்திறனாளி ஆட்டோ ஓட்டுநர்

Published : Jul 05, 2024 6:22 PM

நாகர்கோவிலில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 3 சவரன் நகை திருடிய பெண்களை மடக்கிப் பிடித்த மாற்றுத்திறனாளி ஆட்டோ ஓட்டுநர்

Jul 05, 2024 6:22 PM

நாகர்கோவிலில் ஓடும் பேருந்தில் 3 சவரன் தங்கச் சங்கிலியை திருடிக் கொண்டு கீழே இறங்கி ஆட்டோவில் தப்ப முயன்ற 3 பெண்களில் ஒருவரை நடக்க இயலாத மாற்றுத் திறனாளி ஆட்டோ ஓட்டுநர் மடக்கிப் பிடித்து பொது மக்கள் உதவியுடன் போலீசில் ஒப்படைத்தார்.

குளச்சல் நோக்கி சென்ற பேருந்தில் சுசிதா என்ற பெண்ணின் சங்கிலியை திருடிய அப்பெண்கள், பேருந்து நிறுத்தம் ஒன்றில் இறங்கி, அங்கு நின்றிருந்த ஆட்டோவில் ஏறி தப்ப முயன்றனர்.

அதே நேரத்தில், தமது சங்கிலி திருடப்பட்டதை உணர்ந்த சுசிதாவும் பேருந்தில் இருந்து இறங்கி, அப்பெண்களை விரட்டிச் சென்று ஆட்டோ ஒட்டுநரிடம் தகவல் தெரிவித்தார்.

இதைக் கேட்டு தப்ப முயன்ற அந்த 3 பெண்களில் ஒருவரை தாம் மடக்கியதாக ஆட்டோ ஓட்டுநர் புஷ்பராஜ் கூறினார். எஞ்சிய இருவரில் ஒருவரை போலீசார் கைது செய்த நிலையில் மற்றொருவரை தேடி வருவதாக தெரிவித்தனர்.