​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை வடபழனியில் பால்கனி கைப்பிடிச் சுவர் இடிந்து விழுந்து பூ வியாபாரி உயிரிழப்பு

Published : Jul 05, 2024 4:59 PM

சென்னை வடபழனியில் பால்கனி கைப்பிடிச் சுவர் இடிந்து விழுந்து பூ வியாபாரி உயிரிழப்பு

Jul 05, 2024 4:59 PM

சென்னை வடபழனியில் முதல் தள பால்கனியில் இருந்து பூ வாங்குவதற்காக பெண்மணி ஒருவர் சாய்ந்ததால், கைப்பிடிச் சுவர் இடிந்து கீழே நின்று கொண்டிருந்த பூ வியாபாரியின் தலையில் விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சுமார் 25 ஆண்டுகள் பழமையான 6 மாடி கட்டடத்தின் முதல் தளத்தில் வசித்துவரும் வரலட்சுமி என்ற பெண் அவ்வழியாக சென்ற பூ வியாபாரி கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் பூ வாங்குவதற்காக பால்கனியில் இருந்தபடியே கயிறு கட்டி கூடையை கீழே போட்டுள்ளார்.

பால்கனி கைப்புடி சுவர் மீது வரலட்சுமி சாய்ந்தபோது சுவர் இடிந்து விழுந்த விபத்தில் காயமடைந்த வரலட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.