​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருவள்ளூரில் மூளைச்சாவு அடைந்த ஆட்டோ ஓட்டுநரின் உறுப்புகள் தானம்... இறந்தவர் உடலுக்கு அரசு மரியாதை

Published : Jul 05, 2024 4:08 PM

திருவள்ளூரில் மூளைச்சாவு அடைந்த ஆட்டோ ஓட்டுநரின் உறுப்புகள் தானம்... இறந்தவர் உடலுக்கு அரசு மரியாதை

Jul 05, 2024 4:08 PM

திருவாலங்காட்டில் இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்து உறுப்பு தானம் செய்யப்பட்ட சிவகுமார் என்ற ஆட்டோ ஓட்டுநரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

திருவலங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கடந்த 3-ஆம் தேதி மொபட்டில் ஹெல்மெட் அணியாமல் சென்ற சிவகுமார் வேகத் தடை ஒன்றில் தடுமாறி கீழே விழுந்து தலையில் படுகாயம் அடைந்தார்.

சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மூளைச்சாவு அடைந்த அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் ஒப்புதல் அளித்தனர். அதன் பேரில் சிவகுமாரின் சிறுநீரகம், நுரையீரல், இதயம் உள்ளிட்ட உறுப்புகள் வெவ்வேறு பயனர்களுக்கு வழங்கப்பட்டன.