​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பால்கனி கைப்பிடிச் சுவர் இடிந்து விழுந்து பூ வியாபாரி உயிரிழப்பு

Published : Jul 05, 2024 1:12 PM

பால்கனி கைப்பிடிச் சுவர் இடிந்து விழுந்து பூ வியாபாரி உயிரிழப்பு

Jul 05, 2024 1:12 PM

சென்னை வடபழனியில் முதல் தள பால்கனி கைப்பிடிச் சுவர் இடிந்து விழுந்து பூ வியாபாரி உயிரிழந்தார்.

சுமார் 25 ஆண்டுகள் ஆன 6 மாடி கட்டடத்தின் முதல் தளத்தில் வசித்து வந்த வரலட்சுமி என்ற பெண் அவ்வழியாக சென்ற பூ வியாபாரி கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் பூ வாங்குவதற்காக பால்கனியில் இருந்தபடியே கயிறு கட்டி கூடையை கீழே போட்டுள்ளார்.

பால்கனி மீது வரலட்சுமி சாயும்போது சுவர் இடிந்து கீழே நின்றிருந்த பூ வியாபாரி தலையின் மீது விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணமூர்த்தி பலியான நிலையில் வரலட்சுமி கீழே விழுந்து காயமடைந்தார்.