​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில்... வார இறுதி நாட்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஏற்பாடு

Published : Jul 04, 2024 9:51 PM

சென்னை - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில்... வார இறுதி நாட்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஏற்பாடு

Jul 04, 2024 9:51 PM

சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் வரை வந்தேபாரத் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஜூலை 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரையிலும், மற்றும் 18ஆம் தேதியில் இருந்து 21ஆம் தேதி வரையிலும், வந்தேபாரத் சிறப்பு ரயில், இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் காலை 5 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில் பகல் 1.50 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். மறுமார்க்கத்தில் 2.30 மணிக்குப் புறப்பட்டு, இரவு 11 மணிக்கு சென்னை வந்தடையும்.