​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெட்ரோல் பங்கில் 2000 லிட்டர் மெத்தனால்; பெட்ரோல் பங்கிற்கு சீல் வைப்பு

Published : Jul 04, 2024 9:17 AM

பெட்ரோல் பங்கில் 2000 லிட்டர் மெத்தனால்; பெட்ரோல் பங்கிற்கு சீல் வைப்பு

Jul 04, 2024 9:17 AM

கடலூர் மாவட்டம் வீரப்பெருமாநல்லூரில் சுமார் 2 ஆயிரம் லிட்டர் மெத்தனாலை பதுக்கி வைத்திருந்ததாக இயங்காத பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு சி.பி.சி.ஐ.டி போலீஸார் சீல் வைத்தனர்.

60 க்கும் மேற்பட்டோரைப் பலி கொண்ட கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் சாராயத்தில் மெத்தனால் கலக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, மெத்தனால் எங்கிருந்து வாங்கப்பட்டது என விஷச்சாராய சம்பவத்தில் கைதான மாதேஷிடம் சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின் பேரில் பெட்ரோல் டேங்கில் சிபிசிஐடி போலீஸார் ஆய்வு நடத்தி நடவடிக்கை மேற்கொண்டனர்.