​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காவல் நிலையத்தில் விசாரணைக்கு சென்றவர் உயிரிழந்த விவகாரம்... காவல் ஆய்வாளரின் மனு தள்ளுபடி

Published : Jul 03, 2024 7:01 PM

காவல் நிலையத்தில் விசாரணைக்கு சென்றவர் உயிரிழந்த விவகாரம்... காவல் ஆய்வாளரின் மனு தள்ளுபடி

Jul 03, 2024 7:01 PM

தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து காவல் நிலையத்தில் 1999-ஆம் ஆண்டில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட வின்சென்ட் என்பவர் உயிரிழந்தது தொடர்பான வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி காவல் ஆய்வாளர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

சுமார் 25 ஆண்டுகள் கழித்தும் இந்த வழக்கில் நீதி வழங்காவிட்டால், நீதிமன்றம் மீது அதிருப்தி ஏற்படும் என்று தெரிவித்த நீதிபதி, வழக்குகளை விரைந்து முடிக்க வழக்கறிஞர்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டார்.