​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போதைப் பொருள் விற்பனைக்கான இடமாக மாறிவிட்டனவா சிறைச்சாலைகள்?: எடப்பாடி பழனிசாமி

Published : Jul 03, 2024 6:28 PM

போதைப் பொருள் விற்பனைக்கான இடமாக மாறிவிட்டனவா சிறைச்சாலைகள்?: எடப்பாடி பழனிசாமி

Jul 03, 2024 6:28 PM

போதைப் பொருட்கள் விற்பவர்களைக் கைது செய்து, அவர்களை திருத்தும் இடமாகத் திகழ்ந்த தமிழக சிறைச்சாலைகள், தற்போது பாதுகாப்பாக போதைப் பொருட்கள் விற்பனை மேற்கொள்ளும் இடமாக மாறிவிட்டதா என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

புழல் சிறைக் கைதி ஒருவர், தனது மனைவியுடன் வீடியோ காலில் பேசி மெத்தபட்டமைன்கடத்தலில் ஈடுபட்டதாக வெளியான செய்தியை அறிக்கையில் சுட்டிக்காட்டிய அவர், சிறைவாசிகள் என்ன பேசுகிறார்கள் என்பதை சிறைத்துறை அதிகாரிகள் கவனிக்கிறார்களா அல்லது கடத்தலுக்குத் துணை போகிறார்களா என்று கேட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் உண்மையான அக்கறையுடன் மத்திய அரசு தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்கவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.