​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதுபோதையில் நடுரோட்டில் அமர்ந்து அலப்பறை செய்த இளைஞர் குண்டுக்கட்டாக தூக்கி சென்ற போலீசார்

Published : Jul 03, 2024 1:24 PM

மதுபோதையில் நடுரோட்டில் அமர்ந்து அலப்பறை செய்த இளைஞர் குண்டுக்கட்டாக தூக்கி சென்ற போலீசார்

Jul 03, 2024 1:24 PM

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மதுபோதையில் நடுரோட்டில் அமர்ந்து ரகளை செய்த இளைஞரை போலீசார் குண்டு கட்டாக தூக்கி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அப்பகுதியில் உள்ள மதுக்கடையில் மது அருந்திய இளைஞர் அவ்வழியாக வரும் நபர்களை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து போலீசார் அந்த இளைஞரை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தியதால் அவர் சாலையில் அமர்ந்து அலப்பறையில் ஈடுபட்ட நிலையில், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.