​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொள்ளையடித்து விட்டு திருடிய பொருட்களை ஒரு மாதத்தில் திருப்பி தந்து விடுவதாக கடிதம்

Published : Jul 03, 2024 9:41 AM

கொள்ளையடித்து விட்டு திருடிய பொருட்களை ஒரு மாதத்தில் திருப்பி தந்து விடுவதாக கடிதம்

Jul 03, 2024 9:41 AM

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் கொள்ளையடித்து விட்டு மன்னிப்பு கடிதம் எழுதி வைத்துச் சென்ற திருடனை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஆசிரியரான சித்திரை செல்வின் மனைவியுடன் சென்னைக்கு சென்றிருந்த நிலையில் வீட்டின் பீரோவைத் திறந்து 60 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஒன்றரை பவுன் கம்மல், வெள்ளி கொலுசு ஆகியவை திருடப்பட்டிருந்தது.

தகவலறிந்த போலீஸார் அங்குச் சென்று விசாரணை நடத்திய போது, பச்சை நிற மை பேனாவால் எழுதப்பட்டிருந்த ஒரு கடிதத்தை கைப்பற்றினர்.

அதில், என்னை மன்னித்து விடுங்கள், ஒரு மாத்தில் இதனை திருப்பி தந்து விடுகிறேன், என் வீட்டில் உடம்பு சரியில்லை அதனால் தான் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.