​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 3,000 கனஅடியாக அதிகரிப்பு

Published : Jul 03, 2024 9:37 AM

கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 3,000 கனஅடியாக அதிகரிப்பு

Jul 03, 2024 9:37 AM

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழையால், கர்நாடகத்தின் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கடந்த சில நாள்களாக விநாடிக்கு ஆயிரத்து 500 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 3000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

ஐந்தருவி, சினி ஃபால்ஸ், மெயின் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.