​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னைகள் குறித்து ரேவந்த் ரெட்டியை சந்திக்க சந்திரபாபு நாயுடு விருப்பம்

Published : Jul 02, 2024 5:20 PM

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னைகள் குறித்து ரேவந்த் ரெட்டியை சந்திக்க சந்திரபாபு நாயுடு விருப்பம்

Jul 02, 2024 5:20 PM

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னைகள் குறித்து ரேவந்த் ரெட்டியுடன் சந்திரபாபு நாயுடு பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள ரேவந்த் ரெட்டியின் இல்லத்தில், வரும் 6-ஆம் தேதி பிற்பகல் சந்திப்பை வைத்துக்கொள்ளலாம் என அவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

3மாநிலப் பிரிவினைக்குப் பிறகான கடந்த பத்து ஆண்டுகளில் இரு மாநிலங்களின் நலன் மற்றும் முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், பிரச்னைகளை இணக்கமாகப் பேசி தீர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் சந்திரபாபு குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸில் சேருவதற்கு முன் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்த ரேவந்த் ரெட்டி, கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் நெருங்கிய உதவியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.