​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஸ்வர்ணதாரா நிதி நிறுவனத்திற்காக பணம் வசூலித்த ஓய்வு பெற்ற ஆசிரியர், குடும்பத்தினர் மீது திருவள்ளூர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார்

Published : Jul 02, 2024 2:51 PM

ஸ்வர்ணதாரா நிதி நிறுவனத்திற்காக பணம் வசூலித்த ஓய்வு பெற்ற ஆசிரியர், குடும்பத்தினர் மீது திருவள்ளூர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார்

Jul 02, 2024 2:51 PM

ஒரு லட்ச ரூபாய் கட்டினால்  4 லட்சமாக திருப்பி வழங்கப்படும் எனக் கூறி திருவள்ளூர் மாவட்டத்தில் 1930 பேரிடம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் இயங்கிய ஸ்வர்ணதாரா என்ற நிறுவனத்தின் தொழில் கூட்டாளியான திருவள்ளூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான பாண்டுரங்கன், அவரது மனைவி, மகள், மகன்கள் ஆகியோர் புரோக்கர்களாக செயல்பட்டு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகளிடம் 87 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது.