​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திண்டுக்கல் மாவட்டம் காதல் ஜோடிகளை குறிவைத்து வழிப்பறிகள் ஈடுபட்ட 4 பேர் கைது.

Published : Jul 02, 2024 2:41 PM

திண்டுக்கல் மாவட்டம் காதல் ஜோடிகளை குறிவைத்து வழிப்பறிகள் ஈடுபட்ட 4 பேர் கைது.

Jul 02, 2024 2:41 PM

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு சுற்றுவட்டாரப் பகுதிக்கு வரும் காதல் ஜோடிகளை குறிவைத்து மிரட்டி பணம் பறித்துவந்ததாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த மாதம் 26ஆம் தேதி கல்லூரி மாணவர் ராகுல்  பைக்கில் வந்த மர்ம நபர்கள் தன்னை வழிமறித்து முக்கால் சவரன் செயினை பறித்ததாக அளித்த புகாரை விசாரித்த போலீசார், பிரேம்குமார், பாண்டி, சிவசக்தி மற்றும் ஷேக் பரீத் ஆகியோரை பழனி பைபாஸ் சாலை அருகே சுற்றிவளைத்து கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து 16 சவரன் நகைகள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.