​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆஞ்சியோக்கு சிகிச்சை... மக்கள் பிரார்த்தனைதான் காப்பாற்றியது என மயிலாடுதுறை ஆட்சியர் நெகிழ்ச்சி

Published : Jul 01, 2024 7:42 PM

ஆஞ்சியோக்கு சிகிச்சை... மக்கள் பிரார்த்தனைதான் காப்பாற்றியது என மயிலாடுதுறை ஆட்சியர் நெகிழ்ச்சி

Jul 01, 2024 7:42 PM

நெஞ்சு வலி காரணமாக சென்னை மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை செய்துகொண்ட  மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, சிகிச்சை முடிந்து ஊர் திரும்பிய உடனே ஓய்வு எதுவும் எடுக்காமல் மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

கடந்த வியாழக்கிழமை  ஆஞ்சியோ சிகிச்சை நடந்தநிலையில் இன்று ஊர் திரும்பிய அவர், பொதுமக்கள் சந்தித்து மனுக்களைப் பெற்றார். அப்போது, உங்கள் பிரார்த்தனைதான் என்னைக் காப்பாற்றியது என நெகிழ்ச்சியுடன் கூறினார்.