​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் நபர்கள்.. சிக்கும் சிறு மீன்களை கரையிலேயே வீசிச் செல்வதாகப் புகார்

Published : Jul 01, 2024 8:05 AM

தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் நபர்கள்.. சிக்கும் சிறு மீன்களை கரையிலேயே வீசிச் செல்வதாகப் புகார்

Jul 01, 2024 8:05 AM

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் மீன்வளத்தை அழிக்கும் கும்பல் மீது மீன்வளத்துறை நடவடிக்கை மேற்கொள்ள மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுமார் 15 ஆயிரம் ஹெக்டேர் நீர்ப்பரப்பைக் கொண்ட மேட்டூர் அணையில் தற்போது 40 அடிக்கும் கீழே நீர்மட்டம் சரிந்துள்ளது. இந்த நிலையில், பண்ணவாடி பரிசல் துறை பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்கும் நபர்கள், வலையில் சிக்கும் சிறு மீன்களை கரையிலேயே வீசிவிட்டுச் செல்வதால், அணையின் மீன்வளம் குறைவதோடு, சுகாதாரச் சீர்கேடும் ஏற்படுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.