​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கண்டெய்னர் லாரி ஓட்டுநர்களை கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிப்பு.. காவல் ஆய்வாளரிடம் லாரி உரிமையாளர் கூட்டமைப்பினர் மனு..!

Published : Jul 01, 2024 7:58 AM

கண்டெய்னர் லாரி ஓட்டுநர்களை கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிப்பு.. காவல் ஆய்வாளரிடம் லாரி உரிமையாளர் கூட்டமைப்பினர் மனு..!

Jul 01, 2024 7:58 AM

சென்னை துறைமுகத்திற்கு செல்லும் கண்டெய்னர் லாரி ஓட்டுனர்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி காசிமேடு துறைமுக காவல் நிலைய போலீசாரிடம், லாரி உரிமையாளர் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீஞ்சூர், மாதவரம், பொன்னேரி, மணலி, திருவொற்றியூர் பகுதியில் இருந்து இயக்கப்படும் கண்டெய்னர் லாரி ஓட்டுனர்களை இரவுநேரத்தில் வழிமறித்து கஞ்சா போதையில் மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை திருடிச் செல்வதாக அவர்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இரவு நேரங்களில் துறைமுகத்திற்கு செல்லும் கண்டெய்னர் லாரி ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில், சூரிய நாராயண சாலை முதல் துறைமுக ஜீரோ கேட் வரை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.