​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போலீசாரை ரவுடி சீர்காழி சத்தியா தாக்கிய வழக்கில் மேலும் 2 பேர் கைது...

Published : Jun 30, 2024 3:35 PM

போலீசாரை ரவுடி சீர்காழி சத்தியா தாக்கிய வழக்கில் மேலும் 2 பேர் கைது...

Jun 30, 2024 3:35 PM

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே போலீசாரை, ரவுடி சீர்காழி சத்தியா தாக்கிய வழக்கில் வழக்கறிஞர் அலெக்ஸ் சுதாகர் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் , மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.

பிடிபட்ட தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பால்பாண்டியன மற்றும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த மாரிமுத்து இருவரும் சோழிங்கநல்லூரில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு நீதி மன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.