​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விருதுநகரில் மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டபோது வெடி விபத்து... மாவட்ட ஆட்சியர், எஸ்.பி நேரில் சென்று விசாரணை

Published : Jun 29, 2024 12:48 PM

விருதுநகரில் மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டபோது வெடி விபத்து... மாவட்ட ஆட்சியர், எஸ்.பி நேரில் சென்று விசாரணை

Jun 29, 2024 12:48 PM

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பந்துவார்பட்டி கிராமத்தில் குரு ஸ்டார் எனும் சிறிய ரக பட்டாசுகள் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 3 அறைகள் தரைமட்டமாயின.

அப்போது மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு பேர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியாயினர். சம்பவ இடத்தை விருதுநகர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். வெடி மருந்தில் ஏற்பட்ட உராய்வு காரணமாகவே விபத்து ஏற்பட்டிருப்பதாக ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்தார்.